7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு மக்கள் தர்மஅடி

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வசித்து வரும் தொழிலாளியின் 7 வயது மகள், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தாள். சிறுமியின் தாயார் தறிப்பட்டறைக்கு வேலை சென்று விட்டார். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு நபர், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, பத்து ரூபாயை தந்து கடைக்கு சென்று ஏதாவது தின்பண்டம் வாங்கிக்கொள்ளும்படி கூறினார்.

பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்கு மகிழ்ச்சியுடன் சென்ற சிறுமியை, பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர், நைசாக பேசி காவிரி ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். இதனிடையே, வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாய், மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிறுமியை தேடிக்கொண்டிருந்த போது, இரவு 9 மணியளவில், சோர்வுடன் வீடு திரும்பிய மகளை கண்டு விசாரித்துள்ளார்.

அப்போது, சிறுமியின் உடலில் காயங்களும், ரத்தமும் படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறி அழுதுள்ளார். இதுகுறித்து உடனடியாக குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் இதில் சிறுமியை வாலிபர் ஒருவர் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, அந்த வாலிபரின் படத்தை போட்டோவாக அச்சிட்டு, அப்பகுதி மக்களிடம் போலீசார் விநியோகித்து, அடையாளம் தெரிந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

போட்டோவில் இருந்த நபர், இடைப்பாடி ரோட்டில் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் படுத்திருந்ததை அப்பகுதியினர் நேற்று காலை கண்டனர். விசாரணையில், அந்த நபர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன்(27) என்பதும், கடந்த 10 நாட்களாக குமாரபாளையத்தில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனை கட்டி வைத்த பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் குமாரபாளையம் காவல் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். கைதான் மணிகண்டன் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, மிரட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: