பெரம்பூர்: புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 17வது தெருவில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் வேலாயுதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் திருநங்கை உள்பட 5 பெண்கள் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 17வது தெருவை சேர்ந்த திருநங்கை ராதா (40) மற்றும் ஜெயந்தி (42), அம்மு (35) மற்றும் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் 2 செல்போன் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரையும் புளியந்தோப்பு காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது பிணையில் வரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
