சென்னை: திமுகவில் இணைந்தது பெருமகிழ்ச்சி என திமுகவில் இணைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். அண்ணா தொடங்கிய இயக்கம், கலைஞர் கட்டிக்காத்த இயக்கம் திமுக. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிறார் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.
