- டிஎஸ்பி
- மடபுரம்
- மதுரை
- அஜித் குமார்
- பத்ரகலியம்மன் கோயில்
- சிவகங்கை மாவட்டம், மாதபுரம்
- மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம்
- சண்முகசுந்தரம்
மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.செல்வபாண்டி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் பிடிவாரன்டை நிறைவேற்றும் வகையில் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
