- துணை ஜனாதிபதி
- சேலம்
- இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்
- பொன்னம்மாபேட்டை, சேலம்
- யூனியன் அரசு
- ராதாகிருஷ்ணன்
சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டையில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிறுவனமான இங்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (வெள்ளி) நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் இன்று சேலம் வருகிறார்.
காலை 10.25 மணிக்கு விமானம் மூலம் காமலாபுரம் வரும் அவர் பின்னர் கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகிறார். அங்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
