×

விஜய்யை கலாய்க்கும் அர்ஜூன்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. 41 பேர் இறந்த விஷயத்தில் விஜய் நடந்து கொண்ட முறை மிகவும் தவறானது. அதன் பிறகாவது கட்சியை ஒழுக்கமாக நடத்தி இருக்க வேண்டும். அவரை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. விஜய் நடந்து போகும் காலடியில் முத்தமிடும் ஒரு ரசிக பெண்மணியை பார்க்கும் போது மிகவும் அசிங்கமாக உள்ளது.

எந்தவிதமான அரசியல் பயிற்சியும் இல்லை. பண்பியல் பயிற்சியும் இல்லை. அதை கொடுக்க கடிய நிலைமையில் அவர் இருக்கிறாரா என்றால் அவர்களை விட்டுவிட்டு ஓடும் நிலைமையில் தான் அவர் இருக்கிறார். விஜய் என்னென்னமோ ஆசை காட்டினார். கூட்டணியில் பங்கு என்றார். ஆனால் ஒரு கட்சி கூட, அவருடன் கூட்டணி சேரவில்லை. ஜோசப் விஜய் உட்பட அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். விஜய் என்ற பிம்பம் உடைக்கப்படும்.

மக்கள் உடைப்பார்கள். திமுக, பாஜ, நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் யாரும் இறந்தார்களா. அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் விஜய் கூட்டம் கூட்டினால், தெருவுக்கு வந்தால் நாலு பேர் செத்து போகிறார்கள் என்றால் அது என்ன கட்சி? இது ஜனநாயகனா…. அல்லது பிணநாயகனா… ஒன்றும் புரியவில்லை. கட்சி பதவிகள் ஏலம் விடப்படுகிறது. சசிகலா கட்சி தொடங்க உள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Arjun ,Vijay ,Makkal Katchi ,Arjun Sampath ,Thanjavur ,
× RELATED 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296 கோடி மதிப்பு கட்டிடங்கள் திறப்பு