×

‘எம்எல்ஏ சீட்டு படுத்தும் பாடு’ தவெக மாவட்ட செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி? சொந்த கட்சி காரர்களே ரகசிய திட்டம்

 

நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் சுகுமார். இவர், விஜய் நற்பணி மன்றம் ஆரம்பித்த காலம் முதல் அதில் பயணித்து வந்தவர். கடந்த 2010ம் ஆண்டு ஆறுகாட்டுத்துறை மீனவரை இலங்கை கடற்படை கொலை செய்ததை கண்டித்து, நாகப்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இது தான் விஜய் ஏறிய முதல் அரசியல் மேடை. இதற்கான ஏற்பாடுகளை செய்தவர் சுகுமார். வரும் சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என சுகுமார் விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் சுகுமாரை தொடர்பு கொண்ட தவெக தலைமை, நாகையில் விஜய் நிற்கவில்லை என்றால், நீங்கள் தான் நிற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சுகுமார், தேர்தலில் செலவழிக்க என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதை கட்சி பார்த்துக்கொள்ளும் என தலைமை கூறியுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட சுகுமார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நாகையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 2 பேர் கூலிப்படை ஏவி, சுகுமாரை கொலை செய்து விட்டு நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட திட்டம் தீட்டியிருப்பதாக எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு நாகை போலீசார் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் சுகுமார் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து ஆர்டிஓ சங்கரநாராயணன் முன்னிலையில் தீவிர விசாரணை நடந்தது.
விசாரணையில், சென்னை அல்லது வேறு எந்த மாவட்டத்திற்கும் கட்சி தொடர்பாக சுகுமார் செல்லும் போது அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும், இதில் திட்டம் தீட்டியிருந்த 2 பேர் மாற்று கட்சியில் இருந்து தவெகவிற்கு சமீபத்தில் வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கண்காணிப்பில் சுகுமார் இருந்து வருகிறார். எம்எல்ஏ சீட்டுக்காக தவெக மாவட்ட செயலாளரை, சொந்த கட்சிக்குள்ளே கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி நடக்க உள்ளதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : MLA ,Thavega District ,Sukumar ,Nagapattinam ,District ,Thavega ,Vijay Narpani Mandram ,Sri Lankan Navy ,Arukatthurai ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்