பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலி

கோவை, பிப்.21: தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பலியானார். தர்மபுரியைச் சேர்ந்தவர் அக்சய்குமார் (24). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதற்காக ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அக்சய்குமார் தனது பைக்கில் வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டார்.

புலியகுளம் ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து அக்சய்குமார் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் அக்சய்குமார் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்சய்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Related Stories: