கோவை, பிப்.21: கோவை அண்ணா சிலை அருகேயுள்ள கொடிசியா அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் டான்ஸ்டியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொடிசியா நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்பு உரையாற்றினார்.
இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மேலாளர் இஸ்மாயில் சலாம், அத்திட்டத்தின் அமைப்பு, பயன்கள், வரிச்சலுகைகள் மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகளை விளக்கினார். மேலும் அத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எற்றதாக உள்ளது, அதை தொழில் துறையினர் எளிதாக செயல்படுத்துவது பற்றி எடுத்துரைத்தார்.
