நாளை மறுநாள் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

கோவை, பிப். 14: கோவை மாநகராட்சியின் 2026-2027ம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நாளை மறுதினம் (திங்கள்) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.  இதில், கோவை மாநகரில் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு புதிய திட்டப்பணிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

 

Related Stories: