அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

கோவை, பிப். 18: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் 15வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், நாள்தோறும் இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500, சமையலர் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும். தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காலி தட்டு, டிபன் பாக்ஸ்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உடனடியாக தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

Related Stories: