கார் மோதி பைக்கில் சென்ற முதியவர் பலி

கோவை, பிப். 14: கோவை ஏஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (69). இவர், தனது பைக்கில் நேற்று முன்தினம் எல் ஆண்டு டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரது எதிரே வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சண்முகம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சண்முகம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய பாலக்காட்டை சேர்ந்த சரவணன் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: