பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.70 கோடி

பழநி: பழநி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.70 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், பழநி திருஆவினன்குடி கோயில்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது.

இப்பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கப் பணமாக ரூ.2 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரத்து 250 கிடைத்தது. மேலும் தங்கம் 342 கிராம், வெள்ளி 8,833 கிராம், வெளிநாட்டு கரன்சி 889 ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் வெங்கடேஷ் (பொ), உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

Related Stories: