வேலூரில் நடைபெற உள்ள விஜய் கூட்டத்தில் உயிரிழப்பை தடுக்க தீவிர ஏற்பாடுகள்

வேலூர்: வேலூரில் 23ம்தேதி நடைபெற உள்ள தவெக நிகழ்ச்சிக்கு பாஸ் இல்லாதவர்கள் வர வேண்டாம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வரும் 23ம்தேதி தவெக கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி கேட்டு தவெகவினர், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, கூட்டம் நடைபெறும் இடத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், 50 டாக்டர்கள், 100 நர்சுகள் கொண்ட மினி மருத்துவமனை போல் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், 23ம் தேதி நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க க்யூஆர் கோடு கொண்ட பாஸ் வழங்கப்பட்டு, அதை ஸ்கேன் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். அனைவருக்கும் நாற்காலிகள் அமைக்கப்பட்டு, மேற்கூரை அமைத்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள், பாஸ் இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: