சென்னை: புதிய அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடப்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டை நிலையத்தில் இருந்து பூங்கா நகர் சென்ற புறநகர் ரயில் 1 மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தம். ஒரு மணி நேரத்துக்கு மேலாக புறநகர் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
