சென்னை: வரிப்பகிர்வு குறைப்பு, ஒத்திசைவு பட்டியலில் உள்ள அம்சங்களை ஒன்றிய அரசு பட்டியலுக்கு மாற்றுவது மாநில சுயாட்சியை பாதிக்கிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
