சென்னை: தஞ்சையில் 2022 ஆம் ஆண்டு மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கட்டாய மதமாற்றத்தால் 12ம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்ததாக பாஜக குற்றம்சாட்டி இருந்தது. பாஜகவின் அரசியல் உத்திகளில் மத அடிப்படையில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதும் ஒன்று என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது. பாஜகவின் மதவெறி பிரச்சாரத்துக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் கிடையாது என அவர் கூறினார்.
