புதுடெல்லி: ராகுல் காந்தி மீது சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை என பாஜ விமர்சித்துள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தன் எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் கூட அவர் மீது நம்பிக்கை இல்லை. ராகுல் ஒரு தோல்வியடைந்த வம்சம்” என விமர்சித்துள்ளார். இதேபோல், பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தன் எக்ஸ் பதிவில், “தீவிர காங்கிரஸ் விசுவாசியான மணி சங்கர் அய்யரால் ராகுல் காந்தி வௌிப்படையாக நிராகரிக்கப்படுகிறார். மணி சங்கர் அய்யர், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சொந்த கட்சி, கூட்டணி கட்சியினருக்கு ராகுல் காந்தி ஒரு அரசியல் பப்பு என்பது நன்றாக தெரியும். காங்கிரஸ் கட்சிக்காக வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட காங்கிரஸ் விசுவாசிகள் இப்போது ராகுல் காந்திக்கு எதிராக வௌிப்படையாக பேசுகிறார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
