யாரையும் நம்பாதீர்கள் திருமணத்திற்கு முந்தைய உறவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: திருமணத்திற்கு முன் ஒரு பையனும் பெண்ணும் முற்றிலும் அந்நியர்கள. எனவே திருமணத்திற்கு முன் உடல் உறவில் ஈடுபடும்போது அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு திருமண வலைத்தளத்தில் சந்தித்த பெண்ணும்,ஆணும் அதன்பின்னர் டெல்லியிலும், துபாயிலும் பல முறை நெருக்கமாக இருந்தனர். ஏற்கனவே திருமணம் ஆன அந்த நபர் மீண்டும் 2024 ஜனவரி 19 அன்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமண வாக்குறுதியை மீறியதால் அவர் மீது அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்தன. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண், ஏன் அந்த ஆணுடன் துபாய்க்கு பயணம் செய்து அங்கு உடல் உறவில் ஈடுபட்டார்கள்? இது சம்மதம். நாம் பழங்காலத்தவர்களாக இருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு முன் ஒரு பையனும் பெண்ணும் முற்றிலும் அந்நியர்கள். திருமணத்திற்கு முன் உடல் உறவில் ஈடுபடுவதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது உறவில் அடர்த்தியான மற்றும் மெல்லிய தன்மை எதுவாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் அவர்கள் எவ்வாறு உடல் உறவில் ஈடுபட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம். ஒருவேளை நாம் பழங்காலத்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், திருமணத்திற்கு முன் யாரும் யாரையும் நம்பக்கூடாது. பெண் கொஞ்சம் கண்டிப்பாக இருந்திருந்தால் திருமணத்திற்கு முன் துபாய் சென்றிருக்கக்கூடாது. ஒருமித்த உறவு இருக்கும்போது இவை விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல என்றனர்.

Related Stories: