புதுடெல்லி: பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் நியூஸ் கிளிக் நிறுவனத்தில் 2021 செப்டம்பரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சீன அரசாங்க ஊடக இயந்திரத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதாகக் கூறப்படும் அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கிடமிருந்து நிதி பெற்றதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து நியூஸ் கிளிக் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீது அமலாக்க இயக்குநரகம் ரூ.184 கோடி பெமா அபராதம் விதித்துள்ளது. பிபிகே நியூஸ் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் ரூ.120 கோடி அபராதமும் புர்காயஸ்தா மீது ரூ.64 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
