நாட்டில் வேலையின்மை 5 சதவீதமாக அதிகரிப்பு

புதுடெல்லி: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிகள், போக்குவரத்து, சிறு வர்த்தகம் போன்ற பல நடவடிக்கைகள் குளிர்காலத்தில் மந்த நிலையை ஏற்படுத்தின. நகர்ப்புறங்களில் இவை நிலையானதாக இருந்தது. 15வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு டிசம்பரில்4.8 சதவீதமாக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் கிராமப்புற வேலையின்மை 3.9 சதவீதத்தில் இருந்து 4.2 சதவீதமாகவும், நகர்ப்புற வேலையின்மை 6.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் வேலையின்மை தொடர்ந்து நிலையானதாக இருந்தது. மாறாக அதே வயதுடைய பெண்களிடையே வேலையின்மை கடந்த டிசம்பரை காட்டிலும் ஜனவரியில் அதிகமாக இருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: