விருதுநகர், பிப். 13: விருதுநகர் பாலவநத்தம் அருகே ஜெய் சாய்ராம் கலை அறிவியல் கல்லூரியில் இலவச திறன் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. விருதுநகர் பாலவனநத்தம் அருகே ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செம்ப்கார்ப் இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பைபல் ட்ரீ பவுண்டேசன் இணைந்து நடத்தும் ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் குறித்த இலவச திறன் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செம்ப்கார்ப் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்த இலவச திறன் பயிற்சி திட்டத்தில், 18 முதல் 35 வயது வரை உள்ள விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
