சுகாதார விழிப்புணர்வு பயிற்சி

மதுரை, பிப் 13: மதுரையில் சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. மதுரை, எல்கேபி நகர் நடுநிலைப்பள்ளியில் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இப்பயிற்சி சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண்குழந்தைகளுக்கு சுகாரதார விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் பள்ளி குழந்தைகள் இதுவரை கற்றுக்கொண்டதை வரைபடம் மூலம் வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்டது மாணவிகளுக்கு சுகாதார பெட்டகம் மற்றும் பரிசுகள் வழங்கபட்டது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். அறக்கட்டளை பயிறுநர்கள் மூலம் வளரிளம் பருவ மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்த பல்வேறு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

Related Stories: