வருசநாடு அருகே வன உரிமை கிராம சபை கூட்டம்

வருசநாடு, பிப். 13: தும்மக்குண்டு அருகே சீலமுத்தையாகோயிலில் வன உரிமை 2006ன் படி வன உரிமை கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் கோடாலியூத்து, அண்ணாநகர், சின்னாநகர், மேல்வாலிப்பாறை, சத்யாநகர் ஆகிய கிராமங்கள் இணைந்து வனதேவி உரிமைக்குழு என குழுவாகவும் ,வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், முத்துராஜபுரம் ஆகிய கிராமங்கள் இணைந்து சீலமுத்தையா வன உரிமை குழு என இரண்டு குழுக்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த குழுக்களுக்கு தலைவர், செயலாளர் மற்றும் 15 உறுப்பினர்கள் சபையில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் 2006ன் வன உரிமைச் சட்டத்தில் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சட்ட திட்டங்களை எடுத்துரைத்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: