கஞ்சா விற்ற வாலிபர் கைது

பாலக்காடு, பிப். 13: பாலக்காடு டவுன் பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வெண்ணக்கரை மீலாகுதீன் நகரை சேர்ந்தவர் நவாஸ் (35). இவரது வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாலக்காடு டவுன் சவுத் போலீசார் அவரது வீட்டில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நவாஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரயில் மார்க்கமாக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து இங்கு சப்ளை செய்வதாகவும், வீட்டிற்கு வந்து வாங்குபவர்களுக்கு சில்லரை விற்பனை ெசய்ததாகவும் போலீசாரிடம் நவாஸ் தெரிவித்தார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: