மதுபானம் விற்றவர் கைது

கூடலூர், பிப். 13: கூடலூர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூடலூர் மெயின் பஜாரில் தனியார் வணிக வளாகம் அருகில் ஒருவர் அரசு மதுபான வகைகளை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் கூடலூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: