×

பெருந்துறை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

 

பெருந்துறை, பிப்.10: பெருந்துறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வாழங்கும் திட்டம் விரிவாக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு. என்.டி.வெங்கடாசலம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி உணவு பரிமாறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆணையாளர் புனிதன், பொறியாளர் பழனிவேல், பெருந்துறை மேற்கு, தெற்கு, ஒன்றிய பொறுப்பாளர்கள் சோளி.பிரகாஷ், செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் கனகராஜ், நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் திருமூர்த்தி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Perundurai Municipality ,Perundurai ,Erode Central District DMK ,Minister ,Thoppu. N.T. Venkatachalam ,
× RELATED கடலூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2000 டன் நெல் மூட்டைகள்