- வர்த்தகர்கள் சங்கங்களின் கவுன்சில்
- பெருந்துறை
- ஈரோடு
- மாவட்டம்
- ஜனாதிபதி
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜோசப்
- அமைச்சர்
- எஸ்.முத்துசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வணிகர்களின் நலவாரியம்
பெருந்துறை, பிப்.16: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு கட்டணம் விலக்கு அறிவித்து உள்ளார்.அதுபோல தெருவோர வியாபாரிகள் நலனுக்காக அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு வழிவகை செய்துள்ளார்.
இந்த இரு நல வாரியங்களிலும் வணிகர்களுக்கு அநேக நல்ல பயன்கள் இருக்கின்றன.எங்கள் சங்கம் சார்பாக வருகிற 19ம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் சிறப்பு நிலை பேரூராட்சி வளாகத்தில் நடைபாதை, தள்ளுவண்டி, தினசரி சந்தை, வாரச்சந்தை, வியாபாரிகளுக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த உள்ளோம். அதில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது மாவட்ட செயலாளர் நித்தியகுமார், மாவட்ட துணை தலைவர் பூங்கொடி மணி, மாவட்ட தலைமை நிர்வாக செயலாளர் சுகன்யா நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
