×

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 10வது நாளாக தர்ணா

ஈரோடு, பிப். 14: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடர்ந்து 10வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, காளை மாட்டு சிலை அருகில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த தர்ணா போராட்டத்துக்குகிடையே மதியம் 1.15 மணியளவில், நம்பியூரை சேர்ந்த சத்துணவு பணியாளர் சாந்தி என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இந்த தர்ணா போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Anganwadi ,Erode ,Tamil Nadu Nutritional Food and Anganwadi Associations' Federation ,president ,Dhanushkodi ,
× RELATED கடலூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2000 டன் நெல் மூட்டைகள்