சிறுவளூர் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்,பிப்.5: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவர் அன்புராஜன் கலந்து கொண்டு பேசுகையில், உலகம் முழுவதும் மனித இறப்புக்கு காரணமாக புற்றுநோய் 2 ம் இடத்தில் உள்ளது.

மரபணு மாற்றங்கள், புகையிலை மற்றும் மது பழக்கம், எண்ணையில் பொறித்த உணவுகள், அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்பாடு, நெகிழி பொருள்கள், ரசாயன பயன்பாடு, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை துரித உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.

எனவே பள்ளி மாணவர்கள் எந்தவிதமான புகையிலைப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. அயோடின் உப்பு பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பகுதிநேர சுகாதார செவிலியர் புஷ்பவள்ளி, மருந்தாளுனர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: