கூடலூர் பகுதிகளில் இறைச்சி விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணயக்குழு அமைக்க கோரிக்கை

கூடலூர், பிப். 5: கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இறைச்சி விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கூடலூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட தலைவர் அப்துல் பஷீர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று அளித்த மனுவில், சாதாரண தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க மக்கள் வாங்கக்கூடிய விலையில் இறைச்சி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றி இறைச்சி விலை உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். இறைச்சிக்காக அறுக்கப்படும் விலங்குகள் அரசு மருத்துவரின் முழுமையான ஆரோக்கிய ஆய்வுக்கு பிறகே அறுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: