புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

போடி, பிப். 5: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ. கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுப்புராஜ் நகர் பகுதியில் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் சூர்யா நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 15 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: