ராமேஸ்வரம், பிப்.5: ராமநாமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மாசி மகா சிவராத்திரி வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பிப்.15ம் தேதி மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு, வெள்ளி ரதம் வீதியுலா நடைபெறும். அடுத்த நாள் பிப்.16ம் தேதி திருத்தேரோட்டமும், பிப்.17ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். திருவிழாவின் 2ம் நாளான பிப்.10ம் தேதியன்று, சுவாமி அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளால் நடைபெறும். அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்று பின் அதிகாலை 4 மணிக்கு பஞ்ச மூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடைபெறும். காலை 6:30 மணிக்கு மேல் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். இதனால் அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும். அதே நேரத்தில் பக்தர்கள், கோயில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடல் நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா பிப்.8ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
- மாசி மகா சிவராத்திரி விழா.
- ராமநாத சுவாமி கோயில்
- ராமேஸ்வரம்
- ராமேஸ்வரம்,
- ராமநாதநாதபுரம் மாவட்டம்
- மசி மகா சிவராத்திரி
