நாய் குறுக்கே பாய்ந்தது பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்

புதுக்கடை, பிப்.5: புதுக்கடையை அடுத்த வேங்கோடு, கையாலவிளை பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (25). கொத்தனார். சம்பவத்தன்று பைக்கில் கையாலவிளையில் இருந்து மணியாரம்குன்று சாலையில் சென்று கொண்டிருந்தார். குருசடி அருகில் செல்லும் போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அபிஷேக் படுகாயம் அடைந்தார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: