தஞ்சாவூர், பிப் 4: மெலட்டூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மன் விநியோகம் இன்று நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் கூறியதாவது: மெலட்டூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது.
எனவே அந்த பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் மெலட்டூர், காந்தாவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை முருக்கங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
