ஜெயங்கொண்டம், பிப். 4: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் பழமையான சிந்தோ மதத்தை சேர்ந்த மதகுரு கோகான் மருஹிக்கோ என்பவர் பிரகதீஸ்வரரை வழிபாடு செய்தார். இயற்கையில் இறைவன் இருக்கிறான் என்ற கோட்பாட்டின்படி பஞ்சபூத சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் குறித்து தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்றபோது அங்கு உள்ள வரலாற்றை பார்த்து வியந்த அவர் கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயிலில் நேரில் வந்து பார்த்து சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார்.மேலும் அங்கு அர்ச்சனை செய்து நெய்வேத்தியத்தை பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கினார். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று வழிபடுவதாக கூறினர்.
