டெல்லி : பாம்புக்கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாகவும், இது கவனிக்கப்படாமல் விடப்பட்ட ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடி என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1.38 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக Strike Out Snakebite அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
