கராச்சி: பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் உள்ள தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பினரை குறிவைத்து கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படைகள் வேட்டையாடி வருகின்றன. நேற்று முன்தினம் மூன்று மாகாணங்களில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் 70 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படைகள் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்த 70 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனா்.
