அரசியல் கைதிகளை விடுவிக்க பொது மன்னிப்பு மசோதா வெனிசுலாவில் அறிமுகம்: கொடிய சிறையை மூடவும் முடிவு

கராகஸ்: வெனிசுலா அதிபர் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தி உள்ளது. இதனால் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மசோதா குறித்து அதிபர் ரோட்ரிக்ஸ் நேற்று தொலைக்காட்சி உரை மூலம் அறிவித்துள்ளார். இந்த மசோதா மூலம் 1999 முதல் அரசியல் கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்.

இந்த அறிவிப்பை சிறை கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர். முன்னாள் அதிபர் மதுரோ ஆட்சியில் அரசுக்கு எதிரான பலரும் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டு கராகசின் கொடூரமான ஹெலிகாய்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தொடர்ச்சியாக மனித உரிமை துன்புறுத்தல்கள் நடப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலமுறை குற்றம்சாட்டி உள்ளன. இந்த சிறை உடனடியாக மூடப்பட்டு, விளையாட்டு, சமூக மற்றும் கலாச்சார மையமாக மாற்றப்படும் என அதிபர் ரோட்ரிக்ஸ் கூறி உள்ளார். தற்போது வெனிசுலாவில் 711 பேர் அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கின்றனர்.

Related Stories: