ரூ.1.40 லட்சம் கோடிக்கு இஸ்ரேல், சவுதிக்கு ஆயுதம் விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு மத்தியில், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சுமார் ரூ.1.40 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் மூலம் நிறுத்தப்பட்டு, காசாவை மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல, பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தனது நட்பு நாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு சுமார் ரூ.1.40 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இஸ்ரேலுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பிலும், சவுதிக்கு ரூ.82 ஆயிரம் மதிப்பிலும் ஆயுதங்கள் விற்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு ரூ.35,000 கோடியில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்க உள்ளது. சவுதிக்கு 730 பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்க உள்ளது. இது, வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான சக்தியாக விளங்கும் நேட்டோ அல்லாத முக்கிய கூட்டாளி சவுதி அரேபியாவின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்கு பயனளிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: