சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி

மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. பல முறை புகாரளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் குற்றச்சாட்டு வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பித்தும் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. மனு மீதான நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என்று அறிக்கை தர ஆட்சியருக்கும் கனிமவளத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் மணப்பாறையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Related Stories: