சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பிரவீன் சக்கரவர்த்தி முயற்சி செய்கிறார் என்று செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக வெளியிட்ட கிராபிக்ஸ் பொய்யானது. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன். பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பவர்களின் கனவு பலிக்காது.
