சென்னை : லேப்டாப் திட்டத்தை 2019ல் பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்பதை நாடறியும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தடுக்கும் பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என சிந்திப்பதை எடப்பாடி கைவிடவேண்டும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
