சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைடுத்து, தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனையை மேற்கொள்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
