விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்!!

டெல்லி : விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய் வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ஆஜரான வழக்​கறிஞர் ஒரு​வர், வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் கோடை விடு​முறைக்​குப் பிறகு மனுவை பட்​டியலிடு​மாறு நீதிபதி அமர்​விடம் கோரிக்கை வைத்தார்.

இதைக்​கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய்,” வழக்​கறிஞர்​கள் விடு​முறை நாட்​களில் வேலை செய்ய விரும்​புவ​தில்​லை. ஆனால், வழக்​கு​கள் தேங்​கு​வதற்கு நீதித் துறை​தான் காரணம் என்று
பொது​வாக குற்​றம்​சாட்​டப்​படு​கிறது .விடுமுறை காலத்தில், முதல்முறையாக 5 நீதிபதிகள் அமர்வு பணியாற்றுகிறது. ஆனால், வழக்குகள் நிலுவைக்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். உண்மையில் விடுமுறை நாளில் வேலை செய்ய விரும்பாத வழக்கறிஞர்கள்தான் அதற்கு காரணம்,” இவ்​வாறு பி.ஆர்​.க​வாய் தெரி​வித்​தார்.

The post விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: