மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நீட் மருத்துவ மேற்படிப்பு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சில வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு..

*மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிட வேண்டும்.

*தேசிய மற்றும் மாநில சுற்றுகள் குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் கலந்தாய்வு அட்டவணை தயாரித்து வெளியிட வேண்டும்.

*தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கலந்தாய்வு கட்டணம், கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

*தேசிய அளவில் ஒருமைப்படுத்தப்பட்ட கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் நிறுவ வேண்டும்.

*இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு அடுத்த கலந்தாய்வை தொடங்காமல் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

*நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படத் தன்மையுடன் வெளியிட வேண்டும்.

*மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் தவறிழைக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*தொடர்ந்து தவறு செய்யும் தனியார் கல்லூரிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

*நீட் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

*மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு தணிக்கை முறையை ஏற்படுத்த வேண்டும்.

The post மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: