காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை சங்கராச்சாரியார் மணிமண்டபத்தில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 87வது ஜெயந்தி விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் ஓரிக்கை சங்கராச்சாரியார் மணிமண்டபத்தில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் 87 வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் 69வது பீடாதிபதியாக இருந்து சித்தியடைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87வது ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பங்கேற்றார்.