தாராபுரத்தில் ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை..!!

தாராபுரம்: தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். வழக்கறிஞர் முருகானந்தத்தை (35) கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணைநடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 15 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம். பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட முருகானந்தம் தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் பள்ளி கூடுதல் கட்டிடமான 4-வது மாடி கடந்த மாதம் இடிக்கப்பட்டது.

The post தாராபுரத்தில் ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: