சென்னை: சிவபெருமானின் ஆற்றல் மற்றும் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘அகரவா மகரவா’ என்ற ஆல்பம் வெளியானது. யான் பவுண்டேஷன் வழங்கும் இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமி, தேசமங்கையர்க்கரசி, சிவ.சதீஷ்குமார், ரேகா மணி, ‘ரோமியோ ஜூலியட்’ லஷ்மன், வசந்தமணி, சுகுமார் அழகர்சாமி, எஸ்.சாம், ராஜவேல் கலந்துகொண்டனர்.
கோல்ட் தேவராஜ் பாடியுள்ளார். ‘நீலோத்தி’, ‘கற்றோடு பட்டம் போல’ போன்ற ஹிட் பாடல்களை எழுதியிருந்த சாரதி எழுதியிருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். சமுத்திரக்கனி, லஷ்மன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாவியோ இயக்கியுள்ளார். எடிட்டிங் மற்றும் ஏஐ பணிகளை கவுதம் செய்துள்ளார். பிரதீப் குமார் தீபா தயாரித்துள்ளார். இப்பாடல் யான்தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
