சென்னை: தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து பாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிப்பதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் சமந்தா, கீர்த்தி சுரேஷ். அவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்கள் நட்பு குறித்து பேசியுள்ள சமந்தா, கீர்த்தி சுரேசுக்கு குடி பழக்கம் இருக்கிறதா என்பது பற்றி தெரிவித்துள்ளார். இத்தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் குறித்து சமந்தா கூறுகையில், ‘கீர்த்தி சுரேஷின் உடனிருந்தால் போதும், அங்கு எப்போதுமே சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தளவுக்கு அவர் கலகலப்பாக பேசுவார். அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கிறது என்று பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இரவு 2 மணி என்றாலும், அவர் அப்படித்தான் பேசுவார். நம்மை அங்கிருந்து அப்படியே ஓடவிடுவார். அவர் குடிக்க மாட்டார். ஆனால், ஹைப்பர் மேக்ஸ் ஆகிவிடுவார். 0.3 நொடியில் உங்களை டேமேஜ் செய்துவிடுவார். அந்தளவு அற்புதமான நகைச்சுவை உணர்வு அவருக்கு இருக்கிறது. அவர் பெஸ்ட் மற்றும் மிகவும் வேடிக்கையான நபர்’ என்று தெரிவித்துள்ளார்.
